Govt Job Tips in Tamil – ரயில்வே வேலையின் சிறப்பம்சம் என்ன?

1
155

Govt Job Tips in Tamil – ரயில்வே வேலையின் சிறப்பம்சம் என்ன? அதன் மூலம் ஊழியர்கள் அடையும் சிறப்பு பயன்கள்!

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

 

இந்திய ரயில்வே துறையானது உலகில் உள்ள ரயில்வே துறைகளில் 4 வது பெரிய நெட்வோர்க்காக உள்ளது. மேலும் 15 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு முதலாளியாக ரயில்வே துறை உள்ளது.

அதிகமான ஊழியர்களை கொண்டிருக்கும் உலகின் பெரிய துறைகளில் இந்திய ரயில்வே 9 வது இடத்தில் உள்ளது. ரயில்வேயில் ஆட்களை சேர்க்கும் பொறுப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு ஆணையம் நிர்வகிக்கிறது. ரயில்வே ஆட்சேர்ப்பு ஆணையம் என்ற பெயர் இதற்கு முன்பு ரயில்வே சேவை ஆணையம் என அழைக்கப்பட்டது. ஆனால் 1985 ஆம் ஆண்டு அதன் பெயர் ரயில்வே ஆட்சேர்ப்பு ஆணையம் என பெயர் மாற்றப்பட்டது.

ரயில்வே பணிகள் குறித்த அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் ரயில்வே ஆட்சேர்ப்பு ஆணையத்தால் வழங்கப்படுகின்றன. நீங்கள் ரயில்வே தொடர்பான வேலைகளை தேடுகிறீர்கள் என்றால் நீங்கள் ஆர்.ஆர்.பியின் அதிகாரபூர்வமான வலைத்தளத்தை பார்வையிடலாம். அங்கு உங்களுக்கு ரயில்வே தொடர்பான வேலைகள் குறித்த அறிவிப்புகள் வழங்கப்படும்.

ரயில்வே வேலை என்பது ஒரு வெற்றிக்கரமான விருப்பமான தொழிலாக கருதப்படுகிறது. இந்திய ரயில்வே துறையானது இந்திய அரசுக்கு நல்ல வருவாய் ஈட்டும் ஆதாரமாக உள்ளது. மேலும் ரயில்வே பணிகள் மூலம் நல்ல சலுகைகள் மற்றும் சம்பளங்கள் கிடைக்கின்றன. இதனால் அதிகமான மக்கள் ரயில்வே வேலைகளை விரும்புகின்றனர். எனவே ரயில்வே வேலையின் முக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்போது பார்ப்போம்.

01.இந்திய ரயில்வே வேலை தேடுபவர்களுக்கு ரயில்வே துறையானது அதிகப்படியான காலியிடங்களை வழங்குகிறது. எனவே இந்த துறை அரசு வேலைகள் கிடைப்பதற்கான அதிகப்பட்ச வாய்ப்புகளை வழங்குகிறது என கூறலாம். ஒவ்வொரு ஆண்டும் ஆர்.ஆர்.பி ரயில்வே வேலைகளுக்கு லட்சக்கணக்கான தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற பணிகளுக்காக ஆட்களை வேலைக்கு எடுக்கிறது.

02.இந்திய ரயில்வே துறையானது வடக்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே, மேற்கு ரயில்வே மற்றும் தெற்கு ரயில்வே என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அரசு வேலை தேடுபவர்களுக்கு அரசு வேலை கிடைப்பதற்கான அதிர்ஷ்ட்டத்தை இது வழங்குகிறது. மற்ற அரசு துறையை விட இந்திய ரயில்வே துறையில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

03.ரயில்வேக்கான தேர்வு நடைமுறையானது ஆர்.ஆர்.பி யால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் முழு செயல்முறையும் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையுடன் செயல்படுவதை உறுதிப்படுத்துகிறது. இதனால் நியாயமற்ற தேர்வுகள் நடப்பதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லாமல் போகிறது.

04.இந்திய ரயில்வேவானது டி.எ/ டி.ஹெச்.ஆர்.எ தர ஊதியம் மற்றும் சலுகைகள் போன்ற அரசாங்க வேலைகளுக்கு உரிய அனைத்து சலுகைகளையும் வழங்குகிறது. ஏனெனில் இது இந்திய அரசின் வருவாய் ஈட்டும் மிக முக்கியமான துறையாகும். எனவே இது தனது ஊழியர்களுக்கு நல்ல விதமான சலுகைகளை வழங்குகிறது.

05.ரயில்வே ஒரு பாதுக்காப்பான நிரந்தர வேலையை வழங்குகிறது. மேலும் இது ஊழியர்களுக்கு சேவை காலத்திலும் சேவைக்கு பிந்தைய காலத்திலும் பாதுக்காப்பை அளிக்கிறது. சேவை முடிந்ததும் ஒரு ரயில்வே ஊழியருக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதிய வசதியும் கிடைக்கிறது.

06.ஒரு வேளை ரயில்வே சேவையில் இருக்கும் போதே மரணம் ஏற்பட்டால் அந்த ரயில்வே ஊழியரின் குடும்ப உறுப்பினருக்கு அந்த இழப்பை ஈடு செய்யும் வகையில் குடும்ப உறுப்பினரில் ஒருவருக்கு வேலையை வழங்குகிறது.

07.மேலும் ரயில்வே ஒரு வலுவான தொழிற்சங்கத்தை கொண்டுள்ளது. இந்த சங்கமானது ஊழியர்களின் நன்மைக்காக போராடுகிறது. மற்றும் இதன் மூலம் அவர்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கின்றன.

08.இந்திய ரயில்வே தனது ஊழியர்களுக்கு குடியிருப்பையும் வழங்குகிறது. ரயில் நிலையம் இருக்கும் ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் நன்கு கட்டப்பட்ட ஒரு ரயில்வே குடியிருப்பு காலணிகள் உள்ளன. அவை ரயில்வே ஊழியர்களுக்கு தங்குவதற்கான வசதியை ஏற்படுத்தி தருகின்றன. ரயில்வே ஊழியர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ரயில்வே குடியிருப்பில் தங்கும் வசதியை பெருகின்றனர்.

09.ரயில்வே வேலைகளில் கிடைக்கும் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று என்றால் அது உங்களுக்கு உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்கும் ரயில்வே பாஸ். இதை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள எந்த இடத்திற்கும் இலவசமாக பயணம் செய்ய முடியும்.

10.மேலும் இந்திய ரயில்வே தனது ஊழியர்களுக்கு இலவச மருத்துவ வசதிகளையும் வழங்குகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பல ரயில்வே மருத்துவமனைகள் மற்றும் ரயில்வே மருந்தகங்கள் உள்ளன. அவை ரயில்வே ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்காக மட்டுமே இந்த மருத்துவமனைகள் இயங்குகின்றன.

ஒரு வேளை ரயில்வே ஊழியர்களுக்கு ரயில்வே மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க முடியாத நிலை ஏற்படும்போது அவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கான மொத்த சிகிச்சை செலவையும் ரயில்வே ஏற்றுக்கொள்கிறது.

இவையெல்லாம் இந்திய ரயில்வேயில் பணியாற்றுவதன் மூலம் கிடைக்கும் முக்கிய நன்மைகளாக பார்க்கப்படுகின்றன. இருப்பினும் இது இல்லாமல் ரயில்வே ஊழியர்களுக்கான வேறு பல நன்மைகளையும் வழங்குகிறது. இதன் மூலம் ரயில்வே ஊழியர்கள் பல்வேறு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை பெறுகின்றனர்.

இது அவர்களின் திறன்களையும் அறிவையும் மேம்படுத்துகிறது. ரயில்வே தனியாக பள்ளிகள் முதல் பொறியியல் கல்லூரிகள் வரை கொண்டுள்ளது. இது ரயில்வே ஊழியர்களின் மகன் அல்லது மகள் சிறந்த கல்வியை பெற உதவி புரிகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் இந்திய ரயில்வேயில் பணிப்புரிவது என்பது நல்ல ஊதியம் கிடைக்க கூடிய தொழில் விருப்பமாகும். இது எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது.

எனவே அரசு வேலைகளுக்கு ஆசைப்படுபவர்கள் ரயில்வே வேலைகளுக்கு தயாராகுங்கள். சமீபத்திய ரயில்வே வேலைகள் குறித்து அறிந்துக்கொள்ள நமது தளத்தின் வேலைவாய்ப்பு செய்திகளை பின் தொடருங்கள்.

எங்கள் Telegeram Group-இல் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Youtube Channel-ஐ பார்க்க கிளிக் செய்யவும்.
எங்கள் Facebook பக்கத்தில் இணைய கிளிக் செய்யவும்.
எங்கள் Whatsapp Group-இல் இணைய கிளிக் செய்யவும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here